திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் ரூ.30 லட்சம் போலி மது பறிமுதல்

திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய கேன்கள்.
திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய கேன்கள்.
Updated on
1 min read

திண்டிவனம் அருகே மேல்பாதிகிராமத்தில் உள்ள பண்ணைவீட்டில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்பி ராதாகிருஷ் ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலைதிண்டிவனம் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸார் அக்கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டின் அறை ஒன்றில் 2,043 போலி மது பாட்டி கள், 569 கேன்களில் 19,705 லிட்டர் சாராயம், 960 மது பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பண்ணைவீட்டையும், நிலங்களையும் குத்தகைக்கு எடுத்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமுவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in