மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில்  நீர்திறப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், நேற்று மாலை முதல் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 7,113 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,324 கனஅடியாக சரிந்தது.

நேற்று முன்தினம் 99.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 99.07 அடியானது. நீர் இருப்பு 63.64 டிஎம்சி-யாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in