7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியலில் செங்கை, காஞ்சி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 47 பேர் இடம்பெற்றனர்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியலில் செங்கை, காஞ்சி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 47 பேர் இடம்பெற்றனர்
Updated on
1 min read

7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப்படி மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் காஞ்சி - செங்கை மாவட்ட அரசுப் பள்ளி மாண - மாணவியர் 47 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஒரு மாதமாக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இப்போராட்டங்களின எதிரொலியாக கடந்த 29-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 30-ம் தேதி தமிழக ஆளுநரும் இதற்கான ஒப்புதல் அளித்தார்.

மெடிகல் கட்- ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர, அரசுப் பள்ளிகளில் படித்த 747 மாணவ - மாணவியர் தகுதியுடையோர் என மாவட்ட வாரியாக மதிப்பெண்கள் பட்டியலிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளைச் சார்ந்த மொத்தம் 47 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கீர்த்தனா 267 கட்-ஆஃப் மற்றும் 747 பெயர் பட்டியலில் 32-வது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வுபெற்ற மாணவ - மாணவியருக்கு ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த 29-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in