ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்

ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகிலுள்ள மாரசந்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது நெடுமருதி கிராமம். இங்குள்ள ஏரியை தூர் வார 2019-20-ம் ஆண்டு மாநில நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏரி தூர் வாரும் பணியை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேப்பனப்பள்ளி தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் முருகன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பூமி பூஜையுடன் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேப்பனப்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரகுநாத், மாவட்ட பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in