இரு சக்கர வாகனங்களை திருடியவர் கைது

இரு சக்கர வாகனங்களை திருடியவர் கைது
Updated on
1 min read

திருவண்ணாமலை நகரில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போனது. இதுகுறித்து தி.மலை நகர மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவானது. இந்நிலையில் நேற்று முன்தினம் காவல் துறையினர் தி.மலையில் வாகனத்தனிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அடுத்த தீவனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி(45) என்பதும், தி.மலையில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணா மலை கிராமிய காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in