ரூ. 10 லட்சம் நகைகள் திருட்டு

ரூ. 10 லட்சம் நகைகள் திருட்டு
Updated on
1 min read

செஞ்சி அருகே அப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சுசீலா. கடந்த 22ம் தேதி இரவு, சுசீலா தன் வீட்டு பிரோவில் 23 பவுன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 35 ஆயிரம் ரொக்கப்பணத்தை வைத்திருந்தார். நேற்று முன் தினம் பீரோவை திறந்து பார்த்த போது நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இப்புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருடு போன நகைகள் மதிப்பு சுமார் ரூ 10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in