‘7.5% உள் இடஒதுக்கீடு அரசாணை அதிமுக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி’

‘7.5% உள் இடஒதுக்கீடு அரசாணை அதிமுக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி’
Updated on
1 min read

மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

இதற்கு ஆளுநரின் ஒப்புதலும் கிடைத்திருப்பது தமிழக முதல்வருக்கும், ஆட்சிக்கும் கிடைத்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியாகும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி மொத்தம் உள்ள 4,043 எம்பிபிஎஸ் இடங்களில், 303 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறும்.

அனைத்துக் கட்சியினரும் வரவேற்கக்கூடிய, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய இந்த செயல் திட்டமானது யாரும் கேட்காமலே தமிழக முதல்வரின் சிந்தனையில் உதித்ததாகும். இந்த வெற்றி முழுக்க முழுக்க அதிமுக அரசுக்கு மட்டுமே சொந்தம். இதில், எதிர்க்கட்சி உள்ளிட்ட வேறு யாருக்கும் பங்கு இல்லை.

ஓரிரு நாட்களில் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, பிராஸ்பெக்டஸ் வெளியிடப்படும். அதன்பிறகு தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in