புள்ளி விவர அடிப்படையில் திமுகவிடம் சீட் கேட்போம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அறிவிப்பு

புள்ளி விவர அடிப்படையில் திமுகவிடம் சீட் கேட்போம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அறிவிப்பு
Updated on
1 min read

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கான புள்ளி விவர அடிப்படையில் திமுகவிடம் காங்கிரசுக்கு சீட் கேட்போம் எனக் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கார்த்தி சிதம்பரம் எம்.பி. பெற்றார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவினர் பிரசாந்த் கிஷோர் மூலம் வெற்றி வாய்ப்புக்கான புள்ளி விவரங்களை எப்படி சேகரித்து வைத்துள்ளார்களோ? அதேபோல் காங்கிரசும் சர்வே எடுத்து வருகிறது. இதனால் இந்த தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேசும்போது அறிவியல் பூர்வமாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் சீட் கேட்போம். இந்ததேர்தலில் காங்கிரஸில் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துவேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in