தென்பெண்ணையாற்றில் தொடர் நீர்வரத்து சாத்தனூர் அணை நீர்மட்டம்4 நாட்களில் 5 அடி உயர்ந்தது

தென்பெண்ணையாற்றில் தொடர் நீர்வரத்து சாத்தனூர் அணை நீர்மட்டம்4 நாட்களில் 5 அடி உயர்ந்தது
Updated on
1 min read

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென் பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம், கடந்த 25-ம் தேதி 80 அடியை கடந்தது. அணையில் 1,530 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 277 கனஅடி நீர் வந்தது.

இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால், அணையின் நீர்மட்டம் 85 அடியை கடந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 85.05 அடியை எட்டியது. அணையில் 1,859 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 755 கனஅடி நீர் வருகிறது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in