

ஆரணி முன்பு சித்தூர் ஜில்லாவில் இருந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆரணி, ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் கொண்டுவரப்பட்டது. அந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும்போது, திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்தில் ஆரணி சேர்ந்தது.
ஆரணி, ஆரணியை உள்ளடக்கிய பகுதிகளை முகமது பின் துக்ளக், விஜயநகர மன்னர்கள், இரண்டாம் ஹரிஹரன், மராட்டிய மன்னர் நேதாஜி பாஸ்கர் பந்த், சிவாஜி, முகாலயர்கள், கர்நாடக நவாப்கள், ஹைதர் அலி ஆகியோர் வரிசைக்கிரமமாக ஆண்டுள்ளனர்.