என்ன செய்தார் எம்.பி.?

என்ன செய்தார் எம்.பி.?
Updated on
1 min read

எம்.பி. செ. காந்திச் செல்வனிடம் பேசினோம், “பல ஆண்டு கோரிக்கையான சேலம் - கரூர் பயணிகள் ரயில் இயக்கம். பரமத்தி வேலூர் அருகே சோழசிராமணி பேரேஜில் வாகனப் போக்குவரத்துக்காக ரூ. 6 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு 3-வது குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் சோலார் மின்விளக்கு வசதி செய்துதரப்பட்டுள்ளது. அதுபோல் கொல்லிமலையில் ரூ. 20 கோடி மதிப்பில் இயற்கை சார்ந்த மருத்துவமனை கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அதைச் செயல்படுத்த இயலவில்லை” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in