மோடியை பார்த்து கசாப்புக்காரர்கள் வெட்கப்படுகின்றனர்- லாலு தாக்கு

மோடியை பார்த்து கசாப்புக்காரர்கள் வெட்கப்படுகின்றனர்- லாலு தாக்கு
Updated on
1 min read

பிரதமராக ஆசைப்படும் நரேந்திர மோடியைக் கண்டு, கசாப்புக்காரர்கள் வெட்கப்படுவதாக ராஷ்டீரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடையே வார்த்தைப் போர் மூண்டுள்ள நிலையில், ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் " நாட்டில் உள்ள கசாப்புக்கடைக்காரர்கள் எல்லாம், நரேந்திர மோடியைப் பார்த்து வெட்கப்படுகின்றனர். மோடியா இந்நாட்டின் பிரதமர் ஆகப் போகிறார் என்று கசாப்புக்க்டைக்காரர்கள் திகைத்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'குஜராத்தின் கசாப்புக்கடைக்காரரால் அவரது மனைவியையே பார்த்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நாட்டை எப்படி கவனிப்பார்' என்று கூறினார்.

முன்னதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 'குஜராத் மாநிலத்தின் கசாப்புக்காரர்' என்று திரிணமூல் காங்கிரஸும், மம்தா பானர்ஜீயின் ஓவியம் தொடர்பாக பாஜகவும், ஒருவரை ஒருவர் சாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in